சிங்கள கட்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து மொத்த வியாபாரிகளாக இன்று அவர்கள் வாக்கு சேகரிக்க பழக்கப்படுள்ளார்கள்

தமிழ்மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொள்ளும் தமிழ்தேசிய தலைமைகள் பாராளுமன்றத்திலே சிங்கள கட்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து மொத்த வியாபாரிகளாக இன்று அவர்கள் வாக்கு சேகரிக்க பழக்கப்படுள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சதாசிவம் -வியாளேந்திரன் தெரிவிப்பு.
 

தமிழர்களின் உரிமையைக் பெறக்கூடிய கட்சி என்றும்,தனிக்கட்சி என்றும்,நாங்கள் தமிழ்கட்சி என்றும் வெற்றுக்கோசத்தை தமிழ்மக்களிடம் ஊதிவிட்டு தமிழ்மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொண்டு தமிழ்தேசிய தலைமைகள் பாராளுமன்றம் செல்கின்ற நிலைமையை தொடர்ச்சியாக காணக்கூடியதாகவுள்ளது.பாராளுமன்றம் செல்லும் தமிழ்தேசிய தலைமைகள்  அங்கே சிங்கள கட்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து மொத்த வியாபாரிகளாக்கப்பட்டு  இன்று அவர்கள் வாக்கு சேகரிக்க பழக்கப்படுள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சதாசிவம் -வியாளேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக அவரிடம் (23) கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு கைகோர்த்து செயற்பட்டு தமிழ்மக்களுக்கு தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை.உரிமையையும் பெற்றுக்கொடுக்கவில்லை.அவிருத்தியையும் இவர்களால் தமிழ்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை.தமிழ்மக்களை ஏமாற்றி காலத்தை நீடித்தார்களே தவிர தமிழ்மக்கள் நிம்மதியான  பெருமூச்சைகூட இதுவரையும் விடவில்லை.
 

அவ்வாறானவர்களுடன் இவர்கள் இணைந்து நடாத்திய கூட்டாட்சி; எதிர்கட்சி அல்ல ஆளுங்கட்சிதான் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கினார்கள்.பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையிலும் பிரதமரை பாதுகாத்தும்,அரசாங்கத்தையும் பாதுகாத்தார்களே தவிர எப்போதும் தமிழ்மக்களை மறந்து இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் இப்போதும் தமிழ்மக்களை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்கள்.உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைப் நாங்கள் பெறப்போகின்றோம்.நிலையான அபிவிருத்தியே எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு என்றெல்லாம் தமிழ்தேசிய தலைமைகள் பேசுவது தமிழ்மக்களை பேய்காட்டும் பேய்த்தனமான அரசியலாகும்.இவ்வாறான போலிவார்த்தைகளுக்கு  மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் மயங்கமாட்டார்கள்.இதனை தமிழ்மக்கள் நம்பி மயங்கினால் தமிழ்மக்களுக்குத்தான் ஆபத்து விளையும்.தமிழ்தேசிய தலைமைகளுக்கு ஆபத்தல்ல.அது ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்குத்தான் ஆபத்தை விளைவிக்கும்.

“உரிமை உரிமையென்று பேசிவிட்டு போனாலும்”; “நாங்கள் சலுகைக்காக சோரம் போகமாட்டோம்” என்று கூறிட்டு போகும் தமிழ்தேசிய தலைமைகள் அரசாங்கத்தின் அத்தனை சலுகைகளையும் அனுபவித்திட்டுத்தான் வெளியேறுகின்றார்கள்.இவர்களால் அரசாங்க சம்பளம்,அரசாங்க பொலிஸ்,அரசாங்க பாதுகாப்பு,வாகன வரிச்சலுகைகள்,பாராளுமன்றம் சாப்பாட்டு, போன்ற அரசாங்க சலுகைகள் எல்லாத்தையும் அனுபவிக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆளுங்கட்சியில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பினால்தான் எமது சமூகத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.எமது சமூகத்தின் இருப்பு கேள்விக் குறியாகும் நிலையை உடைத்தெறிய வேண்டுமானால் தமிழ்மக்களின் அரசியல்பலம் சகல அதிகாரங்களுடன் தமிழர் கைகளில் இருக்க வேண்டும்.
 
எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் தற்போதைய ஜனாதிபதி, பிரதமரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னத்துக்கு புள்ளடியிட்டும்,என்னுடைய விருப்பு இலக்கமான 6க்கும் புள்ளடியிட்டு என்னை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பாராளுமன்றம் அனுப்புங்கள்.நாம் இழந்துபோன அத்தனை அபிவிருத்தையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் எனத்தெரிவித்தார்.

Related posts