சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க ஒவ்வொரு கிராம பிரிவுகளிலும் மூன்று பேர்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தேசித்துள்ளது.

கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனுடன் தேசிய ரீதியில் சிறுவர் பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் மீதான கரிசனை குறைவடையும்போது, அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts