சுவிஸ் உதயக் காணிக்கு மதில் அமைப்பதற்கான முதற்;கட்டவேலைகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு திராய்மடுவில் சுவிஸ் உதயத்திற்குச் சொந்தமான காணிக்கு மதில் அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் சுவிஸ் உதயத்தின்  உதவிப்பொருளாளர் எஸ்.சுபாஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் சிரமதானப்பணியும் முன்னெடுக்கப்பட்டது.

சுவிஸ் உதயத்திற்குச் சொந்தமாக இருக்கின்ற காணிக்கு விரைவில் மதில் அமைப்பதற்காக சுவிஸ்நாட்டில் இருந்து வருகைதந்த சுபாஸ் அவர்கள் நேரடியாகக் காணியைப் பார்வையிட்டதுடன் சிரமதானத்தினை மேற்கொண்டனர்.

இச் சிரமதான வேலைகள் 18 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட நிருவாகசபையினர் கலந்துசிறப்பித்தனர்

Related posts