சுவிஸ் உதயத்தினால் குடிநீர்த்திட்டம்

சா.நடனசபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பு 16வது ஆண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை மேற்கு பகுதியில் உள்ள வறிய மக்களுக்கான குடிநீர் திட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. 

சுவிஸ் உதயம் அமைப்பின் 16வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அமைப்பின் தலைவர் சுதர்சன் லிங்கன் அவர்களின் பிள்ளைகளினால் இந்த நீர்விநியோக திட்டத்திற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிச் செயலாளருமான திருமதி செல்வி மனோகர்இ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 ஐந்து வறிய குடும்பங்களுக்கு இந்த நீர்வழங்கல் திட்டங்கள் சுவிஸ் உதயம் அமைப்பினால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

Related posts