சுவிஸ் உதயத்தின்ஏற்பாட்டில் நீர்த்தாங்கி வழங்கி வைப்பு

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டிலும் மகளீர் அமைப்புத் தலைவி செல்வி அவர்களது ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நீர்த்தாங்கி வழங்கிவைக்கும் நிகழ்வு  3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கொடுவாமடு,வேப்பவட்டுவான் பகுதிகளுக்கு 9 நீர்த்தாங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் மற்றும் மகளீர் அமைப்புத் தலைவி செல்வி உட்பட சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.இந்த நீர்த்தாங்கி வழங்குவதற்கான நிதி உதவியினை  சுவிஸ் உதயத்தில் வசிக்கும் துரைநாயகம் நிதிவதனி தம்பதிகளின் பிள்ளைகளான விஜி,சுஜி ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்

பின்தங்கிய பிரதேசங்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதற்கான ஒழுங்குகளைச் செய்த சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ,செயலாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Related posts