சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் தங்கவேலாயுத புரம் அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு உதவி

 

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் பிரதிப் பொருளாளர் சுபாஸ் அவர்களது நிதி உதவியின் மூலம் திருக்கோவில் கல்விவலயத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின் பிரதிப் பொருளாளர் எஸ். சுபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் பாடசாலை நிருவாகமும் பெற்றோர்களும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் உதவி தரம் 1 தொடக்கும் 5 வகுப்புவரையிலான மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பாடசாலையின் அதிபர் எஸ்.கலைக்குமார் உட்பட நிருவாகசபையினர் கலந்துசிறப்பித்தனர்.
இந்த உதவியினை வழங்கிவைத்த சுவிஸ் உதயத்தின் பிரதிப்பொருளாளர் எஸ்.சுபாஸ் மற்றும் சுவிஸ் உதயத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பெற்றோர்களும் பாடசாலை நிருவாகமும் நன்றிதெரிவித்துள்ளனர்.

Related posts