சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் திருமதி செல்விமனோகர் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் பொதுச்சபைக் கூட்டமும் – சுவிஸ் நாட்டில்

 

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் கிழக்கின் உதவிச் செயலாளர் திருமதி செல்விமனோகர் கடந்த 18 ஆம் திகதி மரணமடைந்தார் இவரை நினைவு கூறும் வகையில்  சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் டி.எல். சுதர்சன் அவர்களது தலைமையில் 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை   நினைவு கூறல் நிகழ்வும் அத்துடன் சுவிஸ் உதயத்தின் 2021 ஆண்டிற்கான பொதுச்சபை கூட்டமும் சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.

  சுவிஸ் உதயம் அமைப்பானது ஏழை மக்களுக்காக  2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கையில் பல்வேறு சேவையினை முன்னெடுத்து வருகின்றது. இவ் அமைப்பில்; ஒரு உறுப்பினராக இணைந்து சேவையாற்றியவரே செல்வி மனோகர் ஆவார்

இவரது சேவைகளையும் இவரைப்பற்றியும் நினைவு கூறும் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன்,செயலாளர் அம்பலவானர் ராஜன்,பொருளாளர் க.துரைநாயகம் ஆகியோர் அஞ்சலி உரையினை நிகழ்த்தியதுடன் அங்கு வருகைதந்த அமைப்பின் உறுப்பினர்கள்,நலன்விரும்பிகள் ஆகியோரால் மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டது.

அதேவேளை இவ் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டம் இடம்பெற்றதுடன் இதில் இவ்வருடத்திற்கான வரவு செலவு அறிக்கை பொருளாளர் க.துரைநாயகம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னார் எதிர் வரும் ஆண்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பொதுச்சபையில் ஆராயப்பட்டதுடன் செயலாளர் அம்பலவானர் ராஜன் அவர்களால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது

 

Related posts