சுவிஸ் உதயம் அமைப்பினால் நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கிவைப்பு

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி  7 ஆம் கிராமம்  நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ்நாட்டில் வாழும் செபஸ்ரியன் அவர்களது நிதி உதவி மூலம் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை  சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலனாதன் தலைமையில் நடைற்றது

வறுமைக் கோட்டின் கீழ்வாழும் 30 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன இப்பாடசாலையின் அதிபர் மூ.இராஜகோபால் அவர்கள் சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்கவே இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது

 இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைந்த சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர் செபஸ்ரியன் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் குவேந்திரன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உபசெயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் அப்பாடசாலையின் ஆசிரியர் வெ.ரதிதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Related posts