சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் முனைத்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்.

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில்; முனைத்தீவு  பிரதேசத்தினைச்  சேர்ந்த  மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழும் கஜன் மற்றும் தியாகராஜா ஆகியோரின் நிதி உதவியின் மூலம் கற்றல்  உபகரணம்  வழங்கிவைக்கும் நிகழ்வு 22  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்   தலைமையில்  நடைபெற்றது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன்,  அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உபசெயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் கணக்குப் பரிசோதகர் நாகேந்திரன், உறுப்பினரும் பிரபல கணித ஆசிரியருமான குணசேகரம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்

Related posts