சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகக் குழுக் கூட்டம்

 

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகக் குழுக் கூட்டம் 27 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் போரதீவில் அமைந்துள்ள அலுவலகத்தில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளைத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் ,உபபொருளாளர் பேரின்பராஜா,கிழக்குமாகாணக்கிளையின் உபதலைவர் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன்,செயலாளர் கே.குவேந்திரன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உபசெயலாளர் திருமதி செல்வி மனோகர்,கணக்குப்பரிசோதகர் நாகேந்திரன்,உறுப்பினர் அகிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பினுடைய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

Related posts