சுவீஸ் உதயத்தின் விழாவில் சிறப்புரையாற்றுவதற்கு மு.விமலநாதன், பாவாணர் அக்கரைப்பாக்கியன் சுவிஸ் பயணம்.

சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்புரையாற்றுவதற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவ் அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் சுவிஸ் நாட்டுக்கு 16 ஆம்திகதி இன்று பயணமானார்கள்

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  சுவிஸ் நாட்டில் இடம்பெறவுள்ளது இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் உண்மைத்தன்மையினையும் சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் கிழக்குமாகாணத்தில்  மேற்கொள்ளப்படும்  வேலைத்திட்டங்களையும் சுவிஸ் நாட்டில் வாழும் சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு தெனிவுபடுத்துவதுற்காக இவர்கள் சுவிஸ் நாட்டுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Related posts