சேனா தாக்கம்: குரக்கனும் பாதிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புளுக்களால், குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அநுராதபுரம் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. 

அந்தப் பிரதேசத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பிலான பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதேவேளை அம்பாறை பிரதேசத்தில் கரும்புச் செய்கையும் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 5000 ஹெக்டயர் நிலப்பரப்பிலான கரும்புச் செய்கையின் 13 இடங்களில் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts