” சேர்ந்து காப்போம் கிழக்கை எனும் தொனிப்பொருளில்  ”  பாதையில் குப்பை போட வேண்டாம்

 “

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு   

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்  ஜெ . சி . கமகே   அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில்  வீதிகளில் குப்பைகளை போடுவதை தடுக்கும் வகையில்  பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளை  இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

அந்தவகையில் மட்டக்களப்பு  231 வது இராணுவ பிரிவின் நான்காவது கஜபா  பிரிவு இராணுவ அதிகாரிகளுடன்  மட்டக்களப்பு  மாநகர சபை   இணைந்து முன்னெடுக்கப்படும்    ” சேர்ந்து காப்போம் கிழக்கை எனும் தொனிப்பொருளில்  ”  பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தும்  பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு  பிரதான பேருந்து தரிப்பிட  வளாக பகுதியில் நடைபெற்றது .

231 வது இராணுவ கட்டளை அதிகாரி  கேணல் எஸ்  .பி  .ஜெ  தலைமையில்  கேணல்  ஜி  . ஆர்  . எல்  .எல்  .வழிகாட்டலின்  கீழ்  நடைபெற்ற பிரதான ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் , மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய  பிரதான பொலிஸ்  பரிசோதகர் ,  சி ஐ . குமாரசிறி , மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் . இதன்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்   மக்கள் பார்வைக்காக விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்  ,வாகனங்கள் , வியாபார நிலையங்கள்  , மக்கள் நடமாடும்  பொது  இடங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts