சோமாலியாவில் தீவிரவாதிகளின் வெறிச்செயல் பெண் ஊடகவியலாளர் உயிர் பறிபோனது!

சோமாலியாவின் தென் பகுதியிலுள்ள கிஸ்மயோ நகரின் அசாசே ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதல், மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் பலியானதுடன் மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் பெண் ஊடகவியலாளரும் அவரது கணவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்

தற்கொலை குண்டுதாரியொருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஹோட்டலுக்குள் செலுத்தி வெடிக்க வைத்ததுடன், சிலர் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர் என ஜுப்பாலண்ட் பிராந்திய ஜனாதிபதி அஹமத் மொஹம்மத் இஸ்லாம் மதோபே இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Related posts