ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் மாகாண சபை தேர்தல் இடம்பெறாது

ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் மாகாண சபை தேர்தல் இடம்பெறாது என அரச தகவல்கள் மூலம் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 4 மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல் ஒன்று நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவது சாத்தியமில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களை அடுத்து முதலில் நடத்தும் தேர்தல் தொடர்பில் அரசியல்வாதிகளிடத்து பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலினை நடத்துவது வரை வேறு தேர்தல்கள்  நடத்துவதில்லை என்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related posts