டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக அறிவிப்பு

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 85 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்  அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பருவப் பெயர்ச்சி காலநிலையை அடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்புரவு செய்வது தொடர்பில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்  அருண ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts