தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா?

நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா? என்ற விடயங்களை ஆராய்ந்த பிற்பாடே நரியை ஆதரிப்பது என்ற முடிவினை தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ளனர். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவை விட ரணில் விக்கிரமசிங்க நல்லவரா ரணில்விக்கிரசிங்கவை விட மஹிந்த ராஜபக்ச நல்லவரா என்ற ஊடக வியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்   இலங்கையில் இருந்த ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இருக்கலாம் எவருமே தமிழ் மக்களுக்குரிய இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினையும் தராதவர்கள்தான் அனைவரும் இனப்படுகொலைக்கு முன்னிண்டவர்கள் தான்,இரண்டு பேருமே தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்தாவர்கள் தான், ஆனால் தற்போது ஜனாதிபதி அவர்கள் தன்னிச்சையாக பாராளுமன்றத்தினைக் கலைத்து பிரதமரை நியமித்தமை  19 அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக பிரதமரை நியமித்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது யாரை ஆதரிக்க வேண்டும் என்பதே ஆகும். அதாவது பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் மஹிந்த ஆகிய இருவரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க வேண்டும் எனபதே தற்போது உள்ள பிரச்சினையாகும். 
இதில் இரண்டு விடயம் வருகின்றது அதில் ஒன்று ஜனநாயகத்தை காப்பாற் வேண்டும், அந்த வகையில் ஜனநாயகத்திற்கு முரணாக வந்தவர் என்ற வகையில் தோற்கடிக்க வேண்டும் என்பது ஒன்று இரண்டாவது விடயம் வடகிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்ளித்தோம் என்றால் இனப்படுகொலையாளியை எதிர்த்து வாக்களித்தோம். எமது இலக்கும் அதுதான் மைத்திரியை கொண்டு வருவோம் என்பது எமது இலக்கு அல்ல. இனப்படுகொலையாளியாக இருந்த ஒருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது இரக்கு ஆகும். இதற்காத்தான் மக்கள் வக்களித்தனர். இதற்கான கருவியாகத்தான் மைத்திரி நியமிக்கப்பட்டார.; மைத்திரியுடன் கொண்ட காதலுக்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு தமிழ் மக்களால் புறந்தள்ளப்பட்டவரை பாராளுமன்ற ஆயுள்காலம் முடிவதற்கு முதல் பிரதமராக கொண்டு வருவதற்கு நாங்கள் ஆதரிக்க முடியாதென்பதே இரண்டாவது விடயமாகும்.   இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த விடயத்தில் இரண்டுவிமான கருத்து தற்போது நிலவுகின்றது. அதாவது தமிழத் தேசயிக் கூட்டமைப்பு  நடுநிலமை வகிக்க வேண்டும் என்பது ஒரு சாராரது கருத்தாகும். மற்றய கருத்தாக தீர்வுக்கான எழுத்து மூலமான ஆணையை பெற்று ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.  நடுநிலை என்பது தற்போதுள்ள பாராளுமன்ற தொகையை வைத்துப்பார்த்தால் ஐக்கிய தேசிய கட்சியிடம் போதுமான அசனங்கள் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலமை வகித்திருக்கும். ஆனால் நிலமை அவ்வாறில்லை. மாறாக எழுத்து மூலமான ஆணையை பெற்று ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்ற கருத்தினை எடுத்து பார்த்தால.; ரணில் விக்கிரம சிங்கவிடம் எழுத்து மூலமாகன ஆணையை மடையந்தான் வாங்குவான் காரணம்  ரணில் தனித்து எதனையும் செய்ய முடியாது ஜனாதிபதியும் பாராளுமன்றத்தின் பொரும்பான்மையும் வேண்டும். இவற்றினை ரணில் செய்ய முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்தால்தான் எதனையும் செய்துமுடிக்க முடியும். இந்த விடயத்தை வைத்துக் கொண்டே நாயை ஆதரிப்பதா அல்லது நரியை ஆதரிப்பதா என்ற வகையில் நரியை ஆதரிப்பது என்ற முடிவினை எடுத்துள்ளனர். 
சிங்களத் தலைமைகள் எவராக இருந்தாலும் அவர்களிடம் இனப்பற்றும், பேரினவாதமும் அவர்களிடம் உண்டு உதாரணமாக எடுத்துக் கொண்டால் தற்போது சபாநாயகரும் செய்த வேலையும் பிழையான விடயமாகவே நான் பாரக்கின்றேன் நடுநிலமையான சபாநாயகராக இருந்திருந்தால் மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக ஆராய்ந்த பிற்பாடே அறிவித்திருக்க வேண்டும். இரண்டு அறிவித்தலை விடுத்திருக்கின்றனர் இதில் இருந்து சிங்கள தலமைகள் அனைவரும் இனரிதியாபற்று என்பது அவர்களுக்கு உண்டு என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை என அவர் இதன் போது தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்

Related posts