தமிழரசு கட்சியின் இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும்

இலங்கை தமிழரசு கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ப.சத்தியலிங்கம் தலமையில் நடைபெற்றது.

இவ் மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன் , எஸ்.சிவமோகன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா , துரைரத்தினசிங்கம் , ஈ.சரவணபவன் மற்றும் கட்சியின் பொது செயலாளர் துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழரசு கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

இந்த தெரிவில் வாலிப முன்னணியின் தலைவராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கி.சேயோனும், செயலாளராக பச்சிலைப் பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனும் தெரிவாகியுள்ளார்கள்.

Related posts