தமிழ்மொழித்தினப்போட்டிகள் ஆரம்பம்!

அகில இலங்கை தமிழ்மொழித்தினப்போட்டிக்கான சம்மாந்துறை வலய தமிழ்மொழித்தினப்போட்டிகள் (25) வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் ஆரம்பமாயின.
 
நேற்று சம்மாந்துறைக்கோட்டத்திற்காக தமிழ்மொழித்தினப்போட்டி சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சபூர்த்தம்பிதலைமையில்ஆரம்பமானது.
தேசியகீதம் தமிழ்மொழி;வாழ்த்துதமழ்த்தாய் வணக்கப்பாடல்களைமாணவிகள் பாட அங்குரார்ப்பண உரையை பணிப்பாளர் சபூர்த்தம்பிநிகழ்த்தினார்.
 
மாணவர்கள் ஆர்வத்தோடுஇப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதைக்காணமுடிந்தது.
 
(27)  நாவிதன்வெளிக் கோட்டத்திற்கான தமிழ்மொழித்தினப்போட்டிகள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் செல்வி வி.நிதர்சினி தலைமையில் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

Related posts