தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி

கிழக்கிலே தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி பற்றி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் சந்திப்பு.

கிழக்கிலே தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயமானது கிழக்கிலே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பரபரப்பாக தமிழ்மக்களிடம்,புத்திஜீவிகளிடம்,பெண்களிடம்,அரசியல் பிரமுகர்களிடம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன்
 
சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்கள்.இச்சந்திப்பில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன்
ஆகியோர்கள் இன்று புதன்கிழமை(19) பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

Related posts