தமிழ் கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்மொழிதினப் போட்டி.

தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் மட்டக்களப்பு வலயக்கல்விக் அலுவலகத்தின் தமிழ்மொழிதினம் சனிக்கிழமை (5.5.2018) காலை.8.30 மணியளவில் வின்சன்ட் உயர்தரப் பெண்கள் தேசிய பாடசாலையில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள மூன்று கோட்டக்கல்வி அலுவலகங்களிலிருந்தும் மாணவர்கள் தமிழ்மொழிதினப் போட்டியில் கலந்து கொண்டார்கள்.வில்லுப்பாட்டு,மேடைநாடகம்,விவாதம், பேச்சு,பாவோதல்,இலக்கியப்போட்டிகள்,உட்பட 32 போட்டிகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு கலாச்சாரப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம்,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,அதிபர்கள்,நடுவர்கள்,தீப்பாளர்கள் உட்டபட பலரும் கலந்துகொண்டார்கள்

Related posts