தமிழ் மக்கள் கூட்டணியின் மக்கள் சந்திப்பு… தளவாயில்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

தளவாய் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரதேசத்தின் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதன் போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியின் செயற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் உபதலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான சோமசுந்தரம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வசந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அருந்தவபாலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts