தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு புதுமண்டபத்தடி எண்ணம்பாலப்பூவல் பகுதியில் அனுஸ்டிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு  எண்ணம்பாலப்பூவல் புதுமண்டபத்தடி பகுதியில் இன்று 23 ஆம் திகதி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜா ஜினேஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன் முதற்கட்ட நிகழ்வானது குளிர்மான தாகசாந்தியுடன் ஆரம்பிக்கப்பட்டு அதன்பின்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மாவீரரது தாயான எம்.யோகேஸ்வரி என்பவரினால் அகல்விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஜோன்சன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பிரதேச மக்கள் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts