திருகோணமலையில் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 33 பேர் கைது

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts