திருகோணமலை கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைப்பு

திருகோணமலை, கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருவதாக கன்னியா தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்

கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்

அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் பௌத்த குருமாருடன் கலந்துரையாடியதோடு ஆலயம் உடைக்கப்படும் வேலைகள் தடை செய்யப்பட்டிருந்ததுஇந்நிலையில், கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.இச்சம்பவம் தொடர்பாக ஆலயத்தை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது, உடைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதற்கான அனுமதிக் கடிதத்தை தமக்கு காட்டுவதாகவும் கூறியதாக குருமுதல்வர் தெரிவித்துள்ளார்

Related posts