திருகோணமலை நீதிமன்ற வளாகத்தை பதற்ற நிலைமை

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தை பதற்ற நிலைமைக்கு உட்படுத்திய சட்டத்தரணியொருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருகோணமலை நீதிமன்ற வளாக சிற்றுண்டிச்சாலையில் இன்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை சந்தேகத்திற்கிடமான முறையில் அனுமதியின்றி மேற்சட்டை அணிந்து வந்த நபரொருவர் நீதிமன்ற பெண் உத்தியோகத்தர்களை வீடியோ படம் எடுத்துள்ளார்.

இதன் காரணமாக அப்பகுதிக்கு 15 நிமிடம் அளவில் எந்த ஒரு நீதிமன்ற உத்தியோகத்தர்களும் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நீதிமன்ற சி.சி.டிவி கெமராவில் பதிவானதையடுத்து சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலை பணிபுரிபவரிடம், தான் ஒரு கணக்காய்வாளர் எனவும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிக்க வந்ததாகவும் குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்

Related posts