திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்றைய தினம் தமிழர்களின் தலைநகர் எனப்படும் திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
சவால் மிக்க பல வழக்குகளுக்கு சிறந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் நீதிபதி இளஞ்செழியன் யாழ். குடா நாட்டு மக்களிடம் மாத்திரம் அன்றி இலங்கை வாழ் மக்கள் அனைவரிடத்திலும் தனி மரியாதைக்குரிய ஒருவராக விளங்குகின்றார்
இவரது பக்கச்சார்பற்ற செயற்பாடே இலங்கை வாழ் அனைத்து மக்களிடத்திலும் இவருக்க நன்மதிப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதோடு, இவர் தற்போது திருகோணமலை மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்துள்ளமை தொடர்பில் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Related posts