திருமண யோசனைகளைக் கூறி பெண்களை ஏமாற்றிய நபர் கைது

இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கான திருமண யோசனைகளை முன்வைத்து, அவர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் பூகொட லுனுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து மடிக்கணினி, கார் மற்றும் 123,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூகொட – லுனுகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் இன்று (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related posts