துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

குருதுகஹஹெடேக்ம – அனுறுத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுறுத்தகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts