துறைநீலாவணை கிராமத்தின் மூத்த தமிழ்தேசிய பற்றாளர் ஞானமுத்து-இரத்தினசிங்கம் இறப்பு.

துறைநீலாவணை கிராமத்தின் தமிழரசுக்கட்சியின் மூத்த தமிழ்தேசிய பற்றாளரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நீண்டகால செயற்பாட்டாளருமான ஞானமுத்து இரத்தினசிங்கம் தனது 78 ஆவது வயதில் அன்னாரின் இல்லத்தில் இறைபதம் எய்தினார்.

இவர் பண்டா-செல்வா ஒப்பந்த காலம் முதல் இன்றுவரையும் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காவும் தமிழ்தேசிய உணர்வுடன் செயற்பட்டு தமிழரசு கட்சிக்காக உழைத்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து பல பாராளுமன்ற உறுப்பினர்களையும்,மாகாண சபை உறுப்பினர்களையும் பிரதேச சபை உறுப்பினர்களையும் உருவாக்கியுள்ளார்..

‘வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமிழர்களை பாராளுமன்றம் அனுப்பி; தமிழர்களின் இன்னல்களை உலகறியச் செய்வோம்’ எனும் தமிழ்தேசிய சிந்தனையுடன் தமிழினத்துக்காகவும்,துறைநீலாவணை மண்ணின் மானத்துக்காவும் உழைத்தவர்.அத்தோடு முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களுடன் நெருக்கமாக இருந்து தமிழரசுக்கட்சியைப் பலப்படுத்திய பெருந்தகை இவரது

இறுதிக்கிரியை நாளை திங்கட்கிழமை(11)பிற்பகல் 3.00 மணியளவில் துறைநீலாவணை பொது மயானத்தில் இடபெறவுள்ளது.

Related posts