துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட றொபின் கிண்ணம் களுவாஞ்சிக்குடி அணி வசம்

மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அமரத்துவம் அடைந்த துறைநீலாவணை மத்தியவிளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர் ரொபின் அவர்களின் ஞாபகார்த்த கிறிக்கட் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை மாலை மத்தியவிளையாட்டுக்கழகத்தின் தலைவர் ச.அரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் இறுதிப்போட்டியானது களுவாஞ்சிக்குடி மெக்ஸ் அணிக்கும் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் அணிக்கும் இடையில் இடம்பெற்றதில் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் அணி சம்பியனாகத் தெரிவானதுடன் றொபின் வெற்றிக்கிண்ணத்தினைக் கைபற்றியுள்ளது.

 இப்போட்டிக்கு அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றி இருந்தன.

இந்நிகழ்வில் அதிதிகளாக சிறி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு சிவசிறி த.சுவேந்திரன்குருக்கள், துறைநீலாவணை மெதடிஸ்தன் திருச்சபையின் ஊழியர் வி.கதிரேசன், ஓய்வு நிலை விஞ்ஞான வள முகாமையாளர் நா.புள்ளநாயகம், ஓய்வுநில் நூலகர் கா.பாக்கியராசா, முன்னாள் முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் மாணிக்கராசா ,றொபினின் சகோதரர்  யோ.ரஜனி, தொழில் நுட்ப உத்தியோகத்தர் இ.சுதர்சன் ,சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம.சதிஸ்குமார் உட்பட கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இறுதியாக கழகத்தின் செயலாளர் ஆசிரியர் தி.தயாளன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப் பட்டதுடன் இப்போட்டி நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts