துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சமுத்திர நீராடல்

துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சமுத்திர நீராடல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை பெரியநீலாவணைக் சமுத்திரத்தில் இடம்பெற்றது.

ஆலய உற்சவமானது கடந்த சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு ஆலய உற்சவம் நடைபெற்று வருகிறது. இவ் உற்சவத்தின் விஷேட நிகழ்வாகிய சமுத்திர நீராடல் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

நாளை காலை தீ மிதிப்பு வைபவமும் மாலை சக்கரை அமுது படைக்கும் நிகழ்வும் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts