தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜ் பாலுராஜ் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்.

(-க.விஜயரெத்தினம்) 
இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா கராத்தே தோ போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜ் பாலுராஜ் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். 

 

தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டியில் பாலுராஜ் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 8ஆவது பதக்கம் இதுவாகும்.இந்த வெற்றியின் மூலம் இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றுக் கொண்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே போட்டிகள் பொலன்னறுவை முலுல்லே விஞ்ஞான பீட உள்ளக அரங்கில் நடைபெற்றது.  

இதில் ஆண்களுக்கான கராத்தே தோ போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட பாலுராஜ், தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் தேசிய விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 8ஆவது பதக்கம் இதுவாகும். இதில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என்பன உள்ளடங்கும்.

இதற்குமுன் மூன்று தடவைகள் அதி சிறந்த வீரருக்கான விருதினையும் தட்டிச் சென்ற பாலுராஜ், கடந்த 2014, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேசிய கராத்தே குழாத்தில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ் பேசும் வீரராக 2017இல்  நடைபெற்ற 3ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற பாலுராஜ், எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமைய தேடிக்கொடுக்க காத்திருக்கின்றார்.

அவரது வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
இந்த நிலையில், காட்டா மற்றும் கராத்தோ தோ ஆகிய 2 பிரிவுகளிலும் இடம்பெற்ற காரத்தே தோ போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாண அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.இந்த அணியில் ஷெரொன் சச்சின், எஸ்.ஏ.எஸ் மொஹமட் மற்றும் எஸ். திசோபன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதேநேரம், தேசிய விளையாட்டு விழா கராத்தே தோ போட்டிகளில் வருடத்தின் அதிசிறந்த ஆண் மற்றும் பெண் வீரர்களாக வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவாகினர்.

Related posts