தேர்தல்காரணமாக கண்ணகிகலைஇலக்கியவிழா ஒத்திவைப்பு.

காரைதீவு நிருபர் சகா
 
நாளை(18) வெள்ளிக்கிழமை முதல் காரைதீவில் நடைபெறவிருந்த கண்ணகி கலை இலக்கியகூடலின் 9வது கண்ணகி கலைஇலக்கிய விழா தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இவ்விழா நொவெம்பர் மாதத்தில் நடைபெறுமெனவும் இன்னும் திகதிகள் நிர்ணயிக்கப்படவில்லை எனவும்  காரைதீவுக்கிளைத்  தலைவர் வெ.ஜெயநாதன்  தெரிவித்தார்.
 
 
இவ்விழா நாளை முதல் மூன்று தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts