நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தரவுள்ள உறுப்பினர்களுக்கு ஏற்படவுள்ள நிலை!

நாடாளுமன்ற அமர்வுக்காக இன்று வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் பாலித கத்தியுடன் நாடாளுமன்றிற்கு சென்றிருந்த நிலையிலேயே இன்றைய அமர்விற்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் பரிசோதனைகுட்படுத்தப்படவுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

இன்று காலை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது.

அதன்பின்னர் அனைத்து எம் பிக்களும் விசேட உடற்பரிசோதனை செய்யப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 22ஆம் சரத்திற்கு அமைவாக இடம்பெறவுள்ளதால் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தகதாகும்.

Related posts