நாவிதன்வெளி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக சந்திரப்பிள்ளை ருவுதரன் தெரிவு.

நாவிதன்வெளி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக சந்திரப்பிள்ளை ருவுதரன் தெரிவு.
 
 இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நேற்று முடிவுற்ற நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக   சந்திரப்பிள்ளை ருவுதரன் வெற்றி பெற்றுள்ளார்.
 
இம்முறை நான்கு வேட்பாளர்கள் நாவிதன்வெளியை பிரதிநிதித்துவப்படுத்தி களத்தில் குதித்திருந்தனர். வழமைக்கு மாறாக இம்முறை இளைஞர் பாராளுமன்ற தேர்தல் பல இடங்களிலும் சூடுபிடித்திருந்தது. இதன்படி கடுமையான போட்டியின் மத்தியில் 22 வாக்குகளால் ருவுதரன் வெற்றி பெற்றுள்ளார்.
 
வாக்குகளின் வரிசையில் சந்திரப்பிள்ளை ருவுதரன் 209 வாக்குகளையும்
றியாஸ் மொகமட் அஸ்லம் சஜான் 187 வாக்குகளையும்
சுந்தரலிங்கம் ஜதுர்ஷன் 130 வாக்குகளையும்
யோகராசா லக்ஷாந் 60 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
 
பொதுவான தேர்தல்கள் போலவே வேட்பாளர்களுக்குள் போட்டி நிலவிய போதிலும் இளைஞர்களின் வாக்களிப்பு வீதம் மந்தமாகவே காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts