பரீட்சை தினங்கள் அறிவிப்பு; மேலதிக வகுப்புகளுக்கு தடை

கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், 5ஆம் தர மாணவர்களுக்கான புலமை பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஜுலை மாதம் 30 ஆம் திகதியுடனும், புலமை பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஜுலை மாதம் 31 திகதியுடனும் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts