பல்கலைக்கழக லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு மகளிர் லயன்ஸ் கழகத்தின் நடப்பாண்டுக்கான சேவை பணிப்பேற்றல் நிகழ்வு

பல்கலைக்கழக லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு மகளிர் லயன்ஸ் கழகத்தின் நடப்பாண்டுக்கான சேவை பணிப்பேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

பல்கலைக்கழக லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு மகளிர் லயன்ஸ் கழகத்தின் நடப்பாண்டுக்கான(2019)சேவை பணிப்பேற்றல் நிகழ்வு மட்டக்களப்பு லயன்ஸ் மண்டபத்தில் வலயத் தலைவர் லயன்ஸ் ரோஷனி முருகுப்பிள்ளையின் தலைமையில்  சனிக்கிழமை(13)காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் இரண்டாம் மாவட்ட ஆளுநர்(306C) காஞ்சனா யாப்பா பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மகளிர் லயன்ஸ் கழகத்தின் சார்பாக ஷெறின் விஜித்தா நோபட்,நாகநந்தினி சதீஸ்வரன்,ரஞ்சனி மதிதரன்,பல்கலைக்கழக லயன்ஸ் சார்பாக லயன்ஸ் ரெட்ணராஜா,லயன்ஸ் சசுதரன்,லயன்ஸ் பரணிதரன் ஆகியோர் முறையே தலைவர்,செயலாளராக,பொருளாளராக சுபவேளைக்கு பதவியேற்றார்கள்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக கிளைக்கழகமாக ஆரையம்பதி கிளைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது பாலர் பாடசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.சசிதரன்,மற்றும் சாவித்,கஜேந்திரன்,சதானந்தம் ஆகியோர்கள் புதிய லயன்ஸ் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.இதன்போது லயன்ஸ் கழகத்துக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களுக்கு பிரதம அதிதியால் ஞாபகார்த்த சின்னம்,பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Related posts