பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை – அக்கரைப்பற்று பிரதேசத்தில் 10 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையிலேயே 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், அந்த சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts