பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சின் தகவல்

 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts