பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்

அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சபையில் ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தமைக்கான கடிதங்கள் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக படைகள சேவிதர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் பிரதி அமைச்சர்களுக்கான ஆசனங்கள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கு முன்வரிசையில் ஆசனங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாந்து சுட்டிக்காட்டினார்.

Related posts