பாரியளவிலான போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி!

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளன.

புத்தளம் சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இந்த போதைப்பொருட்கள் இன்று (திங்கட்கிழமை) அழிக்கப்படவுள்ளன.

அதன்படி நீதிபதிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் 769 கிலோகிராம் போதைப்பொருளை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அழிப்பு நடவடிக்கையினை பொதுமக்களும் பார்வையிட முடியுமென போதைப்பொருள் அழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் சமந்த குமார கிதளவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts