பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் –

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ்  (2020.06.29) காலை அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில்
இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts