பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது 14  மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் சத்தமிட்டுள்ளார் விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று . தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
 
மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .
 
இது தொடர்பில் பொத்துவில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 
தவிசாளர் மாற்றம் ஏற்பட இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts