பிரித்தானிய நாட்டவர் ஒருவர் மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரிழ் மூழ்கி உயிரிழப்பு

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பிரித்தானிய நாட்டவர் ஒருவர் மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கோட்டவில பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். 41 வயதான பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கிராமவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மாத்தறை பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts