பிள்ளையானின் வழக்கு ஜனவரி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதலமைச்சரும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானிடம் உண்மை விளம்பல் விசாரணை பெறப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 9 திகதிவரையும் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(TMVP) கட்சியின் தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான (பிள்ளையான்)சிவனேசதுரை சந்திரகாந்தன்  21ம் திகதி விடுதலையாவார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டிடத்தொகுதிக்கு முன்னாள் கட்சி உயர்பீட உறுப்பினர்கள்,பொதுமக்கள்,ஆதரவாளர்கள், காத்துக் கிடந்துள்ள நிலையில் பிள்ளையானின் வழக்கு மீண்டும் ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 11.10.2015 அன்று பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சுமார் மூன்று வருடங்களாக விசாரனைக்காக சிறையில் இருந்துவருகின்ற பிள்ளையான் புதன்கிழமை 21ம் திகதி நடைபெற இருக்கின்ற நீதிமன்ற அமர்வின் போது விடுதலைபெற்று வெளியே வருவார் என்று அவரது கட்சியின் வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்திருந்தார்கள்.

இருந்தும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிள்ளையான் அவர்களிடம் இன்றையதினம் உண்மை விளம்பல் விசாரணை பெறப்பட்டுள்ளது.

Related posts