புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு,விசேட பஸ் சேவை நாளை முதல் (05) முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

குறித்த சேவை, இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை தொடக்கம்  ஏப்ரல் 12 ஆம் திகதி வரை, 1 ஆம் கட்ட சேவையும், ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை, 2 ஆம் கட்ட சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு பிரதான பஸ் தரிப்பிடத்திலிருந்தும், மஹரகம மற்றும் மாக்கும்புற பல் போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்தும், இந்த விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு, தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் நன்மைக் கருதி, மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில், ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

Related posts