பெரியநீலாவணையில் ( ”BUDS”) அமைப்பால் இலவச கற்றல் இகற்பித்தல் வகுப்புக்கள் ஆரம்பமாமாகியது!

 

 

பெரியநீலாவணை 01 B தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் இலண்டன் ”வற்ச்’‘( ”BUDS”)அமைப்பினால் நடாத்தப்படும்  இலவச கற்றல் கற்பித்தல் வகுப்புக்கள்  நேற்று (01) ஆரம்பமானது.

இலண்டன் ”வற்ச் அமைப்பின் மட்டக்களப்பு கிளை நிருவாகிகள் வருகைதந்து   தரம் ஒன்று முதல் தரம் ஐந்து ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக இலவச கற்பித்தல் வகுப்புக்கள்  ஆரம்பித்து வைத்துடன் மாணவர்களுக்கு அப்பியாசகொப்பிகளையும் வழங்கி வைத்தனர்.

தங்கள் கிராம மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்தி இந்த மாலை நேர இவச வகுப்பினை நடாத்த ஏற்பாடு செய்து அணுசரணை செய்யும் இலண்டன் வற்ச் அமைப்பிற்கும் அதன் நிருவாகிகள் அனைவருக்கும் ஆசிரியர்களுக்கும்  பெரியநீலாவணை 01 B பொது மக்கள் நன்றியினை தெரிவித்தனர்.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வற்ச் அமைப்பின் மட்டக்களப்பு கிளைத் தலைவரான ஓய்வுபெற்ற கணக்காளர் பொ.முத்துலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Related posts