பொதுச் சேவைக்கட்டித்தின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தினை ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் இந்துப் பரிபாலன சபைக்குரிய இந்துப் பொதுச் சேவை மன்றத்தின் திருகோணமலையில் அமைந்துள்ள பொதுச் சேவைக்கட்டித்தின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தினை ஏழை மாணவர்களுக்கு செலவு செய்யவுள்ளதாக அவ் அமைப்பின் உறுப்பினர் பி.திருச்செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை தறைமுக அதிகாரசபையின் இந்துப் பொதுச்சேவை மன்றத்திற்குரிய கட்டிடம் திருகோணமலையில் 302 5 உள்துறைமுக வீதியில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் யாராவது தங்குவதற்கு விரும்பினால் குறைந்த கட்டணத்தில் வழங்க இருப்பதுடன் அதன் மூலம் பெறப்படும் நிதியினை அக்கட்டிட பராமரிப்பிற்கும் ஆதரவற்ற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார் தொடர்புகளுக்கு 0267200970,0772926915 தொடர்பு கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts