பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

2019 ஏப்ரல் 28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

(2019 ஏப்ரல் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.)

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது 27ஆம் திகதி அதிகாலை முற்பகல் 05.30 மணிக்கு வட அகலாங்கு 4.5N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.0E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 730 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாகவும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாகவும் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை அண்டியதாகவும் விலகியும் நகரக் கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதி மாலை அளவில் (இந்தியா) வட தமிழ்நாட்டுக் கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், சப்ரகமுவ வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts